தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள தெண்டு இலைகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீடி சுற்றுவதற்கான தெண்டு இலைகளை மூட்டை மூட்டையாக இலங்கைக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டது. இந்திய கடலோர காவல்படையினர் வஜ்ரா கப்பல் ரோந்து சென்றபோது பீடி இலைகளை ஏற்றிவந்த படகை மறித்து பறிமுதல் செய்தது.
