உலகக்கோப்பை கால்பந்தில் மொராக்கோவை வீழ்த்தியது பிரான்ஸ்.. பிரான்சில் வசிக்கும் மொரோக்கோ ரசிகர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக 120 பேர் கைது..!

உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், பிரான்சில் வசிக்கும் மொரோக்கோ ரசிகர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவரம் வெடிக்கக்கூடும் எனக்கருதி, முன்கூட்டியே தலைநகர் பாரிஸில் 5 ஆயிரம் போலீசாரும், பிற பகுதிகளில் 5 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதும், பல்வேறு நகரங்களில் மொராக்கோ ரசிகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்டதாக 120 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.