75 நாட்களைக் கடந்த 'பொன்னியின் செல்வன்'

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 1'.

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக்கி முதல் பாகமாக 'பொன்னியின் செல்வன்' வெளியானது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பின்னும் தியேட்டர்களில் படம் ஓடி வருகிறது.

சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் சில தியேட்டர்களில் 75 நாட்களைக் கடந்தும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான 175க்கும் மேற்பட்ட படங்களில் ஒரு சில படங்கள்தான் 75 நாட்களைக் கடந்துள்ளன. அவற்றில் 'பொன்னியின் செல்வன்' படமும் ஒன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.