காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாரணாசி: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று (டிச.,16) நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.

சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலை பங்களிப்புடன், ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி, உத்தரபிரதேச மாநிலம், காசியில், கடந்த ஒரு மாதமாக நடக்கிறது. காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நுாற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நவ.,19ம் தேதி துவக்கி வைத்தார். இன்றுடன் (டிச.,16) நிகழ்ச்சி முடிவடையும் நிலையில், நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

latest tamil news

இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‛‛பிரதமர் நரேந்திர மோடியின் தேசபக்தி சிந்தனையால் ‛ஒரே பாரதம் உன்னத பாரதம்’ உணர்வை ஒன்றிணைக்கும் விதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‛காசி தமிழ் சங்கமம்’ பெருவிழாவின் நிறைவை இன்று (டிசம்பர் 16) வெகு விமரிசையாகக் கொண்டாடும் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பதில் தேச மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்வோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.