உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பினார் மெஸ்ஸி.. வெற்றிவாகை சூடிய வீரர்களை வரவேற்க தேசிய விடுமுறை அறிவிப்பு!

36 ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின், அர்ஜென்டினாவிற்கு கால்பந்து உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டன் மெஸ்ஸி, வெற்றிக்கோப்பையை ஏந்தியபடி, தாயகம் திரும்பினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய அர்ஜெண்டினா வீரர்களை வரவேற்க அங்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனா பாணியில், அதிபர் மாளிகைக்கு வருகை தந்து வெற்றிக்கோப்பையுடன் போஸ் கொடுக்குமாறு அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை நிராகரித்து, மக்கள் மத்தியில் கொண்டாட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.