சீனாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு: மீண்டும் பொது முடக்கம் அமலாகுமா?

சீனாவில் 2019 இறுதியில்
கொரோனா வைரஸ்
பரவத் தொடங்கிய போது உலகத்தின் அத்தனை மூலைகளிலும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று யாரும் நினைக்கவில்லை. 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகள் முழுவதும் கொரோனா உலகையே தலைகீழாக புரட்டிப் போட்டது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் மூன்றாவது அலையின் பாதிப்பு இருந்தது.

உடல் நலம் பாதிக்கப்படுதல், உயிரிழப்புகள், ஒரு பக்கம் என்றால் பொருளாதார பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது. கொரோனாவாலும் அதன் காரணமாக போடப்பட்ட பொது முடக்கத்தாலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அதிலிருந்து தற்போது மெல்ல மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் சீனாவிலிருந்து அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவில் பிஎப் 7 எனப்படும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர்.

பிஎப் 7 வைரஸ் பரவலையடுத்து அதைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். எனவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதன் காரணமாக வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: ஸ்டாலின் அசத்தல் முடிவு!

கொரோனாவின் உருமாறிய வைரஸான பிஎப் 7 இதற்கு முந்தைய வைரஸ்களை விட மிக வேகமாக பரவிவருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை அடுத்தடுத்து வரும் நிலையில் பத்து நாள்களில் இந்த வைரஸ் பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கொரோனா பிஎப் 7 பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் தினமும் 200 உடல்கள் மேல் நிரம்பி வழிகின்றன. சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்தபடியே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் என்பவர், சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர். லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் திட்டத்தின் பின்னணி என்ன? ரிலாக்ஸ் மூடுக்கு சென்ற எடப்பாடி

சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்ற நாடுகளுக்கு பரவ அதிக காலம் எடுக்காது. அண்டை நாடான சீனாவில் ஏற்பட்டிருக்கும் இந்த சூழல் இந்தியாவிற்கு பரவுவதற்கு முன்னர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சீனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.