வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங் : சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியதன் எதிரொலியாக அங்கு தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில், கடந்த 2019-ம்ஆண்டு இறுதியில் வூஹான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலக நாடுகளுக்கு பரவியது.தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், பெருந்தொற்றில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீண்டு வருகின்றன.
![]() |
இந்நிலையில், சீனாவில் கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தொற்று பரவத்துவங்கியது. இது மேலும் அதிகரிக்கத் துவங்கியதை அடுத்து, அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு பணிந்த சீன அரசு தளர்வுகள் அறிவித்தன.
இந்நிலையில் தளர்வு அறிவிக்கப்பட்டதன் விளைவாக தலைநகர் பீஜிங் உட்பட பல்வேறு நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. நாள்தோறும் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்துள்ளனர். அத்தோடு உயிரிழப்புகள் அதிகரித்ததால், மயானங்களில் சடலங்கள் குவிந்து வருகிறது. அங்கு இறுதிச்சடங்கு செய்யும் சேவை நிறுவனங்கள் பணிச்சுமையால் அவதிக்குள்ளாகி வருகின்றன. சீனாவில் தொற்று பரவலால் பெருகி வரும் உயிர் பலி காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement