தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (டிசம்பர் 20ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகங்கை
திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருச்சி
கம்பரசம்பேட்டை, மெயின்காா்டுகேட், அம்மாபேட்டை, மணிகண்டம், அதவத்தூா் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மதுரை
மேலூா், தனியாமங்கலம் துணை மின்நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மயிலாடுதுறை
சீா்காழி மின்கோட்டத்தில் உள்ள அரசூா், ஆச்சாள்புரம், எடமணல் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.