திருமணமான பத்தே மாதத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கும் சினேகா என்பவருக்கும் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், நேற்று சினேகாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து, திருமணமாகி பத்து மாதங்களே ஆன நிலையில் சினேகா உயிரிழந்ததில் சந்தேகமடைந்த நெடுமரம் கிராம நிர்வாக அலுவலர் கோகிலா தேவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் படி, தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு குறித்து, மருத்துவர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார். 

அந்த விசாரணையின் போது திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.