பரந்தூர் விமான நிலைய விவகாரம் – 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள்

பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் பேட்டியளித்த போராட்டக்குழுவினர், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஆய்வு முடிவின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்ததாக கூறினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.