புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண் ஒருவர் தவறான சிகிச்சையினால் உயிரிழந்து விட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் அதே மருத்துவமனையில் வேறொரு பெண்ணும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு இறந்து போன கர்ப்பிணி பெண்ணுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, அங்கு காவல்துறையினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.