ரஷ்யா மீண்டும் அதிரடி தாக்குதல்: உக்ரைனில் மின்சாரம் துண்டிப்பு; குடிநீர் வினியோகம் பாதிப்பு!

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யப் படைகள் மீண்டும் நடத்திய அதிரடி தாக்குதல்களால், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதோடு, குடிநீர் வினியோகம் தடைபட்டு உள்ளது.

பல ஆண்டுகளாக உக்ரைன் நாட்டை ரஷ்யா சொந்தம் கொண்டாடி வருகிறது. உக்ரைன் நாட்டின் கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்டவை ஒத்துப் போவதால், அந்நாடு, தங்களுக்கு தான் சொந்தம் என, ரஷ்யா உரிமை கோரி வருகிறது. ஆனால் இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தனது நாட்டுப் படைகளுக்கு உத்தரவிட்டார்.

இதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள போதும் அதை எல்லாம் கண்டு கொள்ளாத ரஷ்யா, என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில், உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரம்: நிரவ் மோடி கோரிக்கை நிராகரிப்பு!

இந்நிலையில் இன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பலம் வாய்ந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் தலைநகர் கீவ் கார்கிவ், கிரியு, வடக்கு கார்கிவ் ஆகிய நகரங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எரிசக்தி ஆற்றல் மையம் மற்றும் முக்கிய கட்டடங்கள் மீது இந்த ஏவுகணை விழுந்தன.

இது தொடர்பாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறுகையில், “எரிசக்தி உட்கட்டமைப்பு சேதம் காரணமாக, தலைநகரின் அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ போக்குவரத்து அனைத்து வழிகளிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது,” என தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.