Rajini: ஜெயிலர் திரைப்படம்..கவலையில் நெல்சன்..நம்பிக்கை தந்த தலைவர்..!

ஜெயிலர்ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தை சன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னையில் மிகப்பெரிய ஜெயில் செட்டை உருவாக்கி அதில் படக்குழு படப்பிடிப்பை நடத்தி வருகின்றது. விரைவில் இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்படுகின்றது
வெற்றி நிச்சயம்ரஜினி என்னதான் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருந்து வந்தாலும் அவரின் சமீபத்திய திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றியை பெறவில்லை. எந்திரன் படத்திற்கு பிறகு அவரின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்தது. இந்நிலையில் எப்படியாவது ஒரு வெற்றியை பெறவேண்டும் என போராடி வருகின்றார் ரஜினி. தற்போது ஜெயிலர் படத்தை தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் தலைவர்
அடுத்தடுத்து படங்கள்நெல்சனின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி லைக்காவின் தயாரிப்பில் உருவாகும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார் ரஜினி. கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இதையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது. இப்படத்தின் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக தெரிகின்றது குறிப்பிடத்தக்கது
ரஜினி நம்பிக்கைஇந்நிலையில் ஜெயிலர் படத்தை இயக்கி வரும் நெல்சன் சற்று கவலையில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏனென்றால் அவரின் கடைசி படமான பீஸ்ட் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றார் நெல்சன். எனவே தூக்கமே இல்லாமல் இப்படத்திற்காக உழைத்து வருகிறாராம் நெல்சன். இதை பார்த்த ரஜினி நெல்சனிடம், இப்படம் கண்டிப்பாக வெற்றிபெறும். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம், நிம்மதியாக வேலை செய்யுங்கள் என கூறியுள்ளாராம். தலைவரே இவ்வாறு நம்பிக்கை அளித்ததால் நெல்சன் தற்போது நிம்மதியாக வேலை செய்துவருவதாக சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.