கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்புகின்றன. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். விவேகானந்தர் மண்டபம், திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.