25 கிலோ ஹெராயின் பறிமுதல்| Dinamalar

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பாசில்லா பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் 25 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் அமிர்தசரஸ் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் விமானம் வருவதும் அதனை எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று(டிச.,21) பஞ்சாப் அமிர்தசரஸ் செக்டார் பகுதியில் பரோபல் கிராமத்தின் அருகே பாகிஸ்தானின் ட்ரோன் பறந்தது. உடனடியாக எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தினர். மேலும் 25 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.