பாஜகவில் முன்னாள் அமைச்சர்?; திமுகவுக்கு அண்ணாமலை வேற ரூட்டில் பதிலடி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டி இருக்கும் கைக்கடிகாரம் குறித்து கடந்த சில தினங்களாகவே பல்வேறு தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்போது அண்ணாமலை, ‘தற்போது நான் போடும் சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் மற்றும் கார் எல்லாவற்றையும் ஆய்வு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. நான் கையில் கட்டியிருப்பது ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட சிறப்பு கைக்கடிகாரம்.

ரஃபேல் விமானத்தை தயாரித்த அதே நிறுவனம் தான் மொத்தம் 500 கைக்கடிகாரங்களை தயாரித்தது. ரஃபேல் ஓட்ட கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த கைக்கடிகாரத்தை கட்டி இருக்கின்றேன்.

என் உடலில் உயிர் இருக்கும் வரை இந்த கடிகாரம் எனது கையில் இருக்கும். நான் தேசியவாதி. ரஃபேல் நமது நாட்டுக்கு கிடைத்துள்ள பொக்கிஷம். அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வது மட்டும் தான் ஒரே வேலை’ என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார்.

பொதுவாகவே தமிழக அரசியலில் ஒருவரை பற்றி விமர்சனங்கள் அல்லது சர்ச்சைகள் எழும்போது, குறிப்பிட்ட நபர் வதந்தி என்றோ அல்லது பொய் தகவல் என்றோ தான் சமாளிப்பது வழக்கம்.

ஆனால் அண்ணாமலை அப்படியெல்லாம் பொய் சொல்லாமல் தனது வாட்ச் குறித்து பரவிய தகவலை ஒப்புக்கொண்டதோடு, அதை பற்றிய சிறப்பு அம்சங்களையும் கூறியது தான் அரசியல் கட்சிகளை வாயடைத்து போக செய்துள்ளது.

இதற்கு காரணம் அண்ணாமலை இதுநாள் வரை, ‘நான் ஒரு ஏழை வீட்டு மனிதன். சாமானியனும் தலைவர் ஆக முடியும் என்றால் பாஜகவில் மட்டும் தான் முடியும்’ என ஏகத்துக்கு பேசி வந்தார்.

இந்நிலையில் ரூ.5 லட்சம் மதிப்பில் வாட்ச் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டி உள்ளதாக தகவல் பரவிய நிலையில் அவரே ஒப்புக்கொண்டது தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக அண்ணாமலை ரஃபேல் வாட்ச் வாங்கியதன் பில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கொளுத்தி போட வாட்ச் விவகாரம் விஸ்வரூபமாக கிளம்பியது.

இதை பிடித்துக்கொண்ட சமூக வலைதளவாசிகள், ‘4 ஆடுகள் மட்டும் உள்ளதாகவும், ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் கூறி வந்த அண்ணாமலை இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச் வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வந்தது?

காவல் துறையில் பணியாற்றியபோது அண்ணாமலை ஆட்டையப்போட்டு வாங்கிய வாட்ச் இது’ என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியதால் ஒரே நாளில் அண்ணாமலையின் இமேஜ் படு பாதாளத்துக்கு போனது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை, ‘சாமானியனிடம் வாட்ச் வாங்கியதன் பில் கேட்கிறார்கள். நான் எதற்கும் பயப்பட மாட்டேன். வரும் ஏப்ரல் மாதத்தில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை செய்துள்ள ரூ.2 லட்சம் கோடி ஊழலை வெளிப்படுத்துவேன்’ என பதிலடி கொடுத்துள்ளார்.

அதற்கு அமைச்சர் தரப்பு, ‘வாட்ச் வாங்கியதன் பின் வேண்டும் என தான் கேட்டோம். கேட்ட கேள்வி என்ன? அண்ணாமலை சொல்லும் பதில் என்ன?’ என கேட்டு அண்ணாமலைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில்

மீதுள்ள கோபத்தை தணிக்கும் வகையிலும், திமுகவுக்கு தண்ணி காட்டும் விதமாகவும், அண்ணாமலை மேற்கொண்டுள்ள திடீர் நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் 2021ம் ஆண்டு தேர்தலில் சீட் கிடைக்காததால், கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இதன் பிறகு அதிமுகவில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதைத்தொடர்ந்து திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாகவே காணப்பட்டார்.

இந்நிலையில் அண்ணாமலையின் தடாலடி அரசியலின் பலனாக தோப்பு வெங்கடாச்சலம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் மறுப்பு தெரிவிக்காமல், ‘பின்னர் அறிவிக்கப்படும்’ என கூறியுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. எனவே எந்த நேரத்திலும் தோப்பு வெங்கடாசலம் பாஜகவில் இணையலாம் என தகவல் பரவி வருவதால் திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.