கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில் வரும் இன்று இரவு 7.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண் 06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.