சீனாவில் தினந்தோறும் 10 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு, 5000 உயிரிழப்புகள்? லண்டன் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

சீனாவில் தினமும் பத்து லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு, தினந்தோறும் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சமாக அதிகரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மக்கள் தொகை சுமார் 140 கோடியாக உள்ள நிலையில் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

சுனாமியாக தாக்கியுள்ள சீனாவின் கோவிட் அலை பற்றி லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் சீன அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரப்படி ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் கோவிட்டால் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.