”மாஸ்க் அணிவது, பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை

புத்தாண்டு மற்றும் பண்டிகைகள் வருவதையொட்டி மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் குறித்து மான்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கமளித்தார். அப்போது, சீனாவில் நிலவும் கொரோனா பாதிப்புகள் குறித்தும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் கண்காணிக்கப்படுவதாகவும், வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்படுவதாகவும் கூறினார்.

புதிய வகை கொரோனா பாதிப்பை கண்டறிய, அனைத்து மாதிரிகளிலும் மரபணு பகுப்பாய்வு சோதனை நடத்துமாறும் மாநில அரசுக்கு மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.