எடப்பாடி பழனிசாமி ஸ்கெட்ச்..! – டென்ஷனில் டெல்லி.. பாஜகவுக்கு கல்தா?

அதிமுக – பாஜக கூட்டணியில், நாளுக்கு நாள் முட்டல் மோதல் நிலவி வருவது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகார மோதல்
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில்,

– எதிர்க்கட்சித் தலைவர்

இடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை,

நடத்தினார். அதில், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக,

தேர்வு செய்யப்பட்டார்.

எதிர்ப்பு
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, அதே நாளில் அதே பொதுக்குழு மேடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தார். இதுவரை நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைகளில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சாதகமான உத்தரவுகள் வந்துள்ளன.

பாஜக மவுனம்
இதற்கிடையே, அதிமுக தலைமை விவகாரத்தில் மத்தியில் ஆளும் கூட்டணி கட்சியான பாஜக, எந்த முடிவும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைந்த அதிமுகவையே டெல்லி பாஜக மேலிடம் விரும்புகிறது. அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே எதிர் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக தமிழகத்தில் வெற்றி பெற முடியும் என்றும் அக்கட்சி கருதுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மிகவும் பிடிவாதமாக இருப்பது பாஜக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக டென்ஷன்
இந்நிலையில், அண்மைக்காலமாகவே, அதிமுக நிர்வாகிகள் – பாஜக நிர்வாகிகள் இடையே கூட்டணி விவகாரத்தில் கருத்து மோதல் நீடித்து வருவது, கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பொது இடங்களில், பாஜகவை விமர்சிப்பது, பாஜக நிர்வாகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை எடப்பாடி பழனிசாமி கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களை மேலும் டென்ஷன் ஆக்கி உள்ளது.

தனித்து போட்டி?
இதற்கிடையே, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக உடன்படவில்லை என்றால், அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம் என்ற மனநிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு பாஜகவும் தயாராக வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.