சீனாவின் ஒரே நகரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா.!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து யாராலும் மறுக்க முடியாது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, சுகாதாரத் துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய பரவலுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வகை தொற்றால், அடுத்த மூன்று மாதங்களில், சீனாவின் மக்கள் தொகையில், சுமார் 60 சதவீதம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபமெடுத்து உள்ளது, இந்தியா உட்பட உலக நாடுகளை கதி கலங்கச் செய்துள்ளது.

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல், கொரோனா வைரஸ் தொற்றின் தினசரி பாதிப்புகளை வெளியிடப் போவதில்லை என, சீனாவின், தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. ஆனால் எதற்காக வெளியிடப் போவதில்லை என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், கொரோனா வைரஸ் தினசரி பாதிப்புகளை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை விளாசிய அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

இந்தநிலையில் சீனாவின் ஒரு மாகாணத்தில் நாள்தோறும் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஷாங்காய் அருகில் உள்ள மிகப்பெரிய தொழில் நகரமான ஜெஜியாங் பகுதியில், நாள்தோறும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

‘நீங்கள் செய்வது தானம் அல்ல முதலீடு’ – அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

அதேபோல் நாடு முழுவதும் பதிவு கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் இருந்தபோதிலும், கடந்த சனிக்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு சீனாவின் பிரதான நிலப்பரப்பில் கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இன்று தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.