சீரியல் நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை – சக நடிகர் ஷீசான் கான் கைது

மும்பையில் சீரியல் நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில், சக நடிகரை போலீசார் கைது செய்தனர்.

20 வயதேயான நடிகை துனிஷா, சனிக்கிழமை மும்பையில் நடைபெற்ற சீரியல் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நடிகை துனிஷாவும் அவருடன் நடித்து வந்த ஷீசான் கான் என்பவரும் காதலித்து வந்ததும், கடந்த 15 நாட்களுக்கு முன் பிரேக் அப் செய்து இருவரும் பிரிந்ததால், மன உளைச்சலில் துனிஷா இந்த விபரீத முடிவை எடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, துனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசான் கான் மீது வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.