சீனாவில் தடை அகற்றம்! சிக்கலில் பாகிஸ்தான்! பேரழிவை ஏற்படுத்தும் அண்டை நாடு

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் சீனாவில் அழிவை ஏற்படுத்தி வருகிறது, கடந்த ஒரு வாரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கோவிட்-19 இன் புதிய வகையான BF.7 (Omicron BF.7) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஏற்பட்டிருக்கும் இந்த பேரழிவு, பாகிஸ்தானிலும் பாதிப்பைஇ ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்த கொரோனத் தொற்று வெறும் தொல்லையாக மட்டுமே முடிந்துவிடாமல், மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 இன் புதிய வகை BF.7 (Omicron BF.7) பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என அந்நாட்டின்தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (NCOC) விவரித்துள்ளது.

கொரோனாவின் புதிய வகைகளால் பாகிஸ்தான் ஆபத்தில் உள்ளது

பாகிஸ்தானின் தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (NCOC) சீனாவில் வளர்ந்து வரும் கோவிட்-19 இன் புதிய மாறுபாடு BF.7 (Omicron BF.7) ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று விவரித்துள்ளது. ஜீரோ-கோவிட் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சீனாவின் முடிவு பாகிஸ்தானை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், புதிய கோவிட்-19 மாறுபாட்டை பாகிஸ்தான் எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் NCOC கூறியுள்ளது.

மேலும் படிக்க | கொரோனா வைரஸ் இன்னும் முடியவில்லை? தொடர்ந்து பரவும் கோவிட் நோய்

பயண விதிகளை தளர்த்திய சீனா 

நாட்டில் லாக்டவுனை முடித்துக்கொண்ட சீனா, பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியதாகவும் NCOC தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கோவிட் -19 இன் புதிய மாறுபாடு பாகிஸ்தானுக்குள் எளிதாக நுழைய முடியும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றுநோய் தொடங்கிய பின்னர், சீனா தடைகளை நீக்கியுள்ளது, இது பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்று NCOC தெரிவித்துள்ளது.

கொரோனாத் தொற்றின் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்ததால், உலக நாடுகளின் பெரும்பாலானவை கொரோனா  கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின. ஆனால், அப்போதும் சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள், லாக்டவுன், தடைகள், பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன.

ஆனால், தற்போது உலகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நாடுகளில் பல, கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில் சீனா மட்டும் தடைகளை அகற்றி வருவது சர்வதேச அளவில் பல கேள்விகளை எழுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் புதிய மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான தயாரிப்பு

இருப்பினும், கோவிட்-19 இன் புதிய மாறுபாடு BF.7 (Omicron BF.7) இன் தொற்றுநோயைத் தடுக்க பாகிஸ்தான் தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளது, இது NCOC ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இந்த மாறுபாட்டை எதிர்கொள்ள பாகிஸ்தான் முழுமையாக தயாராக இருப்பதாக NCOC அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பும் நாம் கொரோனாவை எதிர்கொண்டோம், தற்போது கொரோனா தடுப்பூசி காரணமாக ஆபத்தும் குறைந்துள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை சிதைத்த பனிப்புயல்! அமெரிக்காவில் 17 பேர் பலி

பாகிஸ்தானில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

பாகிஸ்தானில், தடுப்பூசி போடுவதற்கு தகுதியான மக்களில் 90 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். சுமார் 95 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனா பரிசோதனையில் 0.3 சதவீதம் பாசிடிவ்

பாகிஸ்தானின் தேசிய சுகாதார நிறுவனத்தின் (NIH) தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 4403 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 13 பேர் மட்டுமே கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதன் காரணமாக நேர்மறை விகிதம் 0.3 சதவீதத்தை எட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | சீனாவில் இருந்து உத்திரபிரதேசத்திற்கு வந்த கொரோனா! பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.