“பாசிச சக்திகளுக்கு சவால் விடுபவருடன் நிற்பது என் கடமை!" – ராகுலுடன் யாத்திரையில் இணையும் முஃப்தி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மூலம் ஒவ்வொரு மாநிலமாக சென்று மக்களை நேரில் சந்தித்து வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உட்பட ஒன்பது மாநிலங்களை ராகுல் காந்தி கடந்துவிட்டார். அடுத்தகட்டமாக ராகுல் காந்தி ஜனவரி 3-ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் யாத்திரையைத் தொடங்கவிருக்கிறார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்

இதில் கலந்துகொள்ளுமாறு உத்திரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவர்களான அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்டவர்களுக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்கள் இதில் கலந்துகொள்வார்களா என்பது உறுதியாகவில்லை. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்வது குறித்து முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

மெகபூபா முஃப்தி

இது குறித்து மெகபூபா முஃப்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஜம்மு காஷ்மீரில் நடைபெறவிருக்கும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு முறைப்படி இன்று எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கட்டுப்படுத்த முடியாத அவரின் தைரியத்துக்கு வணக்கம் செலுத்துங்கள். பாசிச சக்திகளுக்கு சாவல் விடும் துணிச்சல் கொண்ட ஒருவருடன் நிற்பது என் கடமை என்று நான் நம்புகிறேன். சிறந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் அவருடன் இணைந்து கொள்வேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.