கல்யாணத்திற்கு கண்டிஷன் போட்ட ராகுல் காந்தி.!

வருகிற 2024ம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அக்கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி.

கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது பயணம் தற்போது டெல்லியில் நுழைந்துள்ளது. இந்தநிலையில் தனக்கு மனைவியாக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், என்னுடைய தாய் சோனியா காந்தி மற்றும் பாட்டி
இந்திரா காந்தி
ஆகியோரின் குணங்களின் கலவையாக இருந்தால் நல்லது.

அவரது வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை. அவரது வாழ்க்கையில் உறவுகள் சரியாக இல்லை என்பதாக் சோகமாக உள்ளார். அதன் காரணமாகவே மற்றவர்களை அவர் இழிவுபடுத்தி வருகிறார். பரவாயில்லை இருக்கட்டும். நான் அதை வரவேற்கிறேன். மேலும் இழிவுபடுத்தட்டும். நான் விரும்புகிறேன். எனக்கு மேலும் பல பெயர்களை வைத்திடுங்கள். நான் நிதானமாகவே இருப்பேன். என்னுடைய பாட்டியும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை தன்னுடைய இரண்டாவது தாய். தன்னுடைய வாழ்வில் அன்பிற்குரியவர்.

நான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டி இருக்கிறேன். ஆனால் எலெக்ட்ரிக் பைக்குகளை ஓட்டியது இல்லை. நீங்கள் இந்த சீன நிறுவனத்தை பார்த்து இருக்கிறீர்களா? அவை எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் கூடிய சைக்கிள் மற்றும் மலை பைக்குகள். மிகவும் அருமையான சிந்தனை. சிறப்பாகவும் உள்ளன.

எனக்கு கார்களின் மீது அதிக ஆர்வம் கிடையாது. மோட்டார் பைக்குகள் மீது எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால், மோட்டார் பைக்குகள் ஓட்டுவது எனக்கு பிடிக்கும். கார்களை பழுதுபார்க்க தெரியும், ஆனால், அதில் ஆர்வம் இல்லை. வேகமாக செல்வது காற்றில் செல்வது, நீரில் செல்வது, நிலத்தில் செல்வதற்கான ஐடியா எனக்கு பிடிக்கும்.

இந்தித் திணிப்பு: ஒன்றிய அமைச்சர் ஆணவ பேச்சு – சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!

வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார்கள். எனக்கு அதை பற்றி கவலை இல்லை. நீங்கள் அவ்வாறு சொல்ல நினைத்தாலும் அது பெரிய விசயம் இல்லை. நான் யாரையும் வெறுக்கவில்லை. நீங்கள் என்னை அவமதித்தாலும், ஏன் என்னை தாக்கினாலும் கூட நான் உங்களை வெறுக்க மாட்டேன்’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.