காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால், காதலனால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெத்தாம்பாளையத்தைச் சேர்ந்த பூஜா, அதே பகுதியை சேர்ந்த லோகேஷை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், திருமணம் செய்ய சொல்லி, பூஜா வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பூஜாவும், லோகேஷும் காட்டுப்பகுதிக்கு சென்றதாகவும், அப்போது திருமணம் குறித்து பூஜா மீண்டும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், லோகேஷ் கல்லை கொண்டு தாக்கியதில், தலையில் காயமடைந்த பூஜா மயக்கமடைந்த நிலையில், அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்.

80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பூஜா, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.