ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது..!

நியூயார்க்கிலிருந்து, டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மூதாட்டி மீது, மதுபோதையில் சிறுநீர் கழித்த நபரை, பெங்களூருவில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, நிகழ்ந்த விவகாரம் குறித்து, ஏர் இந்தியா நிறுவனம் இந்த வாரம் புகார் அளித்தது. அதன்படி, விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சங்கர் மிஷ்ரா மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

சங்கர் மிஷ்ராவை போலீசார் தேடி வந்த நிலையில், தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர். சங்கரை டெல்லி அழைத்து வந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.