சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் போது லஞ்சம் பெற்று பணி ஆணை பெற்றதாக 25 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக பணியில் நீடிக்கும் நிலையில் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
