100வது நாளில் பணப்பையுடன் வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்!


பிக்பாஸ் போட்டியாளர் கதிரவன் 100வது நாளில் பணப்பையுடன் வெளியேறினார்.


அவசரப்பட்ட கதிரவன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதி வாரத்தில் 6 பேர் மட்டுமே தகுதி பெற்ற நிலையில், இந்நிகழ்ச்சி 100வது நாளை எட்டியுள்ளது.

நேற்றைய தினம் மீதமுள்ள 6 போட்டியாளர்களில் ஒருவர் விருப்பப்பட்டால் பணத்துடன் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டு பணப்பை அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த காலங்களில் ஒரு லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் அதிகரிக்கப்பட்டது. ஆனால், நேற்று தொடக்க தொகையாக ரூ.3 லட்சம் அறிவிக்கப்பட்டதும் கதிரவன் அதனை எடுத்துக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

கதிரவன்/Kathiravan

குறைவான தொகை உள்ளதால் அனைத்து போட்டியாளர்களும் அதனை எடுக்க வேண்டாம் என்று கதிரவனிடம் கூறினர்.

ஆனால் அவரோ யார் பேச்சையும் கேட்காமல் பணப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.


புலம்பிய சக போட்டியாளர்கள்

இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்தால் பணம் அதிகரித்திருக்கும் என்று சக போட்டியாளர்கள் புலம்பினர்.

அத்துடன் கதிரவனின் வெளியேற்றம் போட்டியாளர்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பின்னர் வீட்டிற்குள் வந்த மாமிச உணவுகளை மீதமுள்ள போட்டியாளர்கள் உண்டு மகிழ்ந்ததுடன் நேற்றைய Episode முடிவடைந்தது.  

கதிரவன்/Kathiravan

கதிரவன்/Kathiravan



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.