சந்தானத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய சுந்தர் சி – விரைவில் 'அரண்மனை 4'

இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களில் ஹாரர் காட்சிகளுடன் காமெடியும் கலந்திருக்கும். அந்த வகையில் வெளியான அரண்மனை அடுத்தடுத்த படங்கள் வெற்றியை பெற்றது.

இந்த படங்களுக்கு பிறகு சுந்தர் சி, 'காபி வித் காதல்' படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. இதையடுத்து 'அரண்மனை 4' படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான பணிகளில் சுந்தர் சி ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சந்தானமும், இயக்குனர் சுந்தர் சியும் இணைந்து தங்களது பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நிகழ்வில் முக்கியமாக நடிகர் விஜய் சேதுபதி கலந்துக் கொண்டார். இது 'அரண்மனை 4' படத்தை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தற்போது 'அரண்மனை 4' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது . லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.