ஏர் இந்தியாவின் விமானத்தில் மது அருந்துவது தொடர்பான விதிகளில் திருத்தம்

விமானத்துக்குள் மது அருந்துவது தொடர்பான கொள்கையில் சில திருத்தங்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் அண்மையில் பயணி ஒருவர் சகபயணி மீது சிறுநீர் கழித்தது போன்ற விரும்பத்தகாத சில சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பான முறையில் விமானத்தில் மதுவழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.விமானத்தில் பயணிகள் தாமாக மது அருந்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

விமானப் பணிக்குழுவினரால் மட்டும் மது வழங்கப்பட வேண்டும் என்றும் தாமாக மது அருந்தி வரும் பயணிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணி கூடுதலான மதுவைக் கேட்டால் மறுக்க வேண்டும் என்றும் பணிக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.