தெலுங்கானாவில் குடியரசு தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கொரோனா தொற்றுப் பரவலை காரணம் காட்டி குடியரசு தின அணிவகுப்பை தெலுங்கானா அரசு ரத்து செய்துள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது வெளியில் குடியரசு தின அணிவகுப்பு நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு, கொரோனா பரவல் நெறிமுறையை அமல்படுத்துவதற்கான எந்த உத்தரவையும் மாநில அரசாங்கம் சமர்பிக்கவில்லை என்று கூறி, அதை நிராகரித்த நீதிபதி, குடியரசு தினத்தன்று வழக்கமாக நடைபெறும் காவல்துறையினரின் அணிவகுப்பு, ஆளுநர் தேசியக் கொடி ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.