‘விடுதலை’ படம் தொடர்பாக விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்.. விரைவில் ரிலீஸ்?

வெற்றிமாறன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் துவங்கியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. வெற்றிமாறன் இயக்கி வந்த இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக சத்தியமங்கலம், சிறுமலை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், அண்மையில் தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘நீ தானே என் பொன்வசந்தம்’ உட்பட பல படங்களை தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாகம் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். இதனால் விரைவில் இந்தப் படத்தின் முதல் பாகம் ரிலீஸை எதிர்பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.