காஷ்மீர் பண்டிட்கள் விவகாரம்; பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

தற்போது ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள், முன்பு ஜம்மு-காஷ்மீர் என்கிற தனி மாநிலமாக இருந்தது. 1989-95 காலகட்டத்தில் காஷ்மீர் பயங்கரவாதிகளின் சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல்களால் 700க்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பலியாகினர்.

அவர்கள் தங்கள் உயிரையும் குடும்பத்தையும் பாதுகாக்க, வீடுகளையும் சொத்துகளையும் கைவிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறி ஜம்முவில் அடைக்கலம் புகுந்தனர். இவ்வாறு ஜம்முவில் குடிபெயர்ந்த அகதி பண்டிட்களின் எண்ணிக்கை சுமார் 3.5 லட்சம்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தவுடன், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறிய காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை மீண்டும் அங்கு குடியமர்த்தும் பணிகளைத் தொடங்கியது.

காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரின் மறுகுடியமர்வுக்காக பிரதமரின் மேம்பாட்டுத் திட்டம் 2015-இல் தொடங்கப்பட்டது. அதன்படி, ஜம்மு – காஷ்மீரில் உள்ள அரசுப் பணியிடங்களில் 3,000 இடங்கள் காஷ்மீர் அகதி பண்டிட்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த ஐந்தாண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 2,639 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தும் 2019ல் நீக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெறும்பான்மை தீவிரவாதிகள் அங்கு அரசுப் பணியில் அமரும் காஷ்மீர் பண்டிட்களைத் தாக்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் காஷ்மீர் பண்டிட்கள் மூவர் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினர் 14 பேர் ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்டிருப்பதாக, மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்திருக்கிறார். மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு தான் அதிகளவு தாக்குதல் நடைபெற்றுவருவதாக காஷ்மீர் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு மத்திய செவி சாய்க்கவில்லை. போராட்டக்காரர்களை பாஜகவினர் சந்திக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் காஷ்மீரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டபோது, அங்கு பிரச்சினைகளை சந்தித்து வரும் சிறுபான்மையினரான காஷ்மீரி பண்டிட்களை அவர் சந்தித்தார். இந்தநிலையில் அவர்களின் நிலை குறித்து ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து தப்பி ஓடிய காஷ்மீர் பண்டிட் ஊழியர்களை, ஜம்மு பகுதியில் உள்ள அதிகாரிகள் மீண்டும் பள்ளத்தாக்குக்குத் திரும்பி வேலையைத் தொடரும்படி வற்புறுத்தப்படுகின்றனர்.

அரசு அதிகாரிகள் தங்களை காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வேலைக்குச் செல்லும்படி வற்புறுத்துவதாக அவர்கள் (காஷ்மீர் பண்டிட் பிரதிநிதிகள்) என்னிடம் கூறினார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு பாதுகாப்பு நிலைமை சரியாக இல்லாதபோது அவர்களை திருப்பி அனுப்புவது கொடூரமான செயல்.

அதானியின் மோசடி குறித்து விசாரணை; 9 எதிர்கட்சிகள் முழக்கம்.!

நிலைமை மேம்படும் வரை, இந்த காஷ்மீரி பண்டிட் ஊழியர்களின் சேவைகளை மற்ற நிர்வாக மற்றும் பொது வசதிகளில் அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களின் கவலைகள் மற்றும் கோரிக்கைகளின் செய்தியை உங்களுக்கு எடுத்துச் செல்ல என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன் என்று காஷ்மீரி பண்டிட் சகோதர, சகோதரிகளுக்கு உறுதியளித்தேன். எனவே நிலையை உணர்ந்து நீங்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என ராகுல் காந்தி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.