துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் – இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்


துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் - இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Earthquake Hits Turkey

தெற்கு துருக்கியில் உள்ள காசிண்டெப் அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், லெபனான், சிரியா உள்ளிட்ட பல நாடுகள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நில அதிர்வை உணர்ந்தன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.