உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்: முழு பலம் எட்டியது

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 2 நீதிபதிகள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து முழு பலத்தை எட்டி உள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, புதிய நீதிபதிகள் 2 பேரும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 2 புதிய நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து முழு பலத்தை எட்டி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.