இவ்வருட ஐரோப்பிய – இலங்கை பிக்குமார் சங்கத்தின் முதலாவது உச்சி மாநாட்டை ஒஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் வியன்னா பௌத்த மத்திய நிலையத்தின் தலைவரும், ஐரோப்பிய பிரதம சங்கநாயக்கர் விஜயராஜபுர சீலவிமல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.