தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகை இத்தனை கோடியா? தொகையை விடுவித்த ஜிஎஸ்டி கவுன்சில்!

ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை 16 ஆயிரத்து 982 கோடி ரூபாயை விடுவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் GST கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தாவது,

“ஜிஎஸ்டி இழப்பீட்டின் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை இன்று முதல் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளோம். அதாவது, ஜூன் மாதத்திற்கான மொத்த நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.16,982 கோடி செலுத்தப்படும்.

இன்றைய நிலவரப்படி இழப்பீட்டு நிதியில் இந்தத் தொகை உண்மையில் இல்லை என்றாலும், இந்தத் தொகையை எங்களின் சொந்த ஆதாரங்களில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளோம்.

அதே தொகை எதிர்கால இழப்பீட்டு செஸ் வசூலில் இருந்து திரும்பப் பெறப்படும். இந்த வெளியீட்டின் மூலம், ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017 இல் திட்டமிடப்பட்டுள்ளபடி, 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இழப்பீட்டு செஸ் நிலுவைத் தொகையை மத்திய அரசு செலுத்தும்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக 1201 கோடி ரூபாய் இதன் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.