பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று மாரடைப்பால் கலாமானார். 57 வயதான மயில்சாமி சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கெ மயில்சாமியின் உடலை பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவரின் உடல் பிரிந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் மயில்சாமியின் மறைவு திரைத்துறையை சார்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது ஒன்றாக இருக்கின்றது.
Mayilsamy: மயில்சாமி வாழ்க்கையை படமாகவே எடுக்கலாம்..மறைந்த நடிகர் விவேக் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..!
பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் மயில்சாமியை பற்றிய செய்திகள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர். அவர் மக்களுக்கு செய்த உதவி, அவரின் குணத்தை பற்றி திரைபிரபலங்கள் கூறுவது போன்ற வீடியோக்களை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அந்த வகையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மயில்சாமி தான் திரையில் முதல் முதலில் பேசிய வசனம் பற்றி ஒரு மேடையில் பேசியுள்ளார். பாக்கியராஜ் நடிப்பில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் திரையில் தோன்றிய மயில்சாமி பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான கன்னி ராசி படத்தில் தான் முதல் முதலில் வசனம் பேசினார்.
அப்படத்தில் ஒரு காட்சியில் மளிகை பொருட்களை எடுத்துவரும் பையனாக வருவார் மயில்சாமி. அப்போது கவுண்டமணியிடம் மளிகை பொருட்களை காட்டி வசனம் பேசுவார். அதுதான் மயில்சாமி திரையில் பேசிய முதல் வசனமாகும்.
இந்நிலையில் இக்காட்சி படமாக்கப்பட்டபோது மயில்சாமியை பார்த்தவுடன் கவுண்டமணி அழைத்தாராம். அழைத்து எந்த ஊரு, உன் பெரு என்ன என்றெல்லாம் விசாரித்த கவுண்டமணி மயில்சாமியிடம் நடிக்க வந்த புதுசுலே உனக்கு வசனம் எல்லாம் கிடைச்சுருக்கே என கூறினாராம். இதனை மேடையில் ஒரு முறை மயில்சாமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.