கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.55,000 மின் கட்டணம்.. மின்சார வாரிய அதிகாரிகள் உத்தரவால் கூலித் தொழிலாளி பரிதவிப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒரிக்கை அருகே கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு 55ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் கட்டுமாறு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முரளிநகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இப்பகுதியில் தாம் கட்டி வரும் வீட்டிற்கு  மின் இணைப்பு பெற்றார். ஆனால் மின் கணக்கீட்டாளர் இந்த குடியிருப்பில் மின் கட்டண விவரம் எடுப்பதற்கு சரியாக வராததால் மணிகண்டனே மின் அலுவலகத்திற்கு சென்று 2 மாதங்களுக்கு ஒருமுறை  கட்டணத்தை கேட்டு அபராதத்துடன் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், இம்மாதம் 55 ஆயிரத்து 230 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இந்த தொகையை எப்படி கட்டுவது என்று தெரியாமல் தவித்து வருகிறார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.