மெக்சிகோவில் பேருந்து விபத்து: அமெரிக்காவிற்கு புலம்பெயர்வதற்காக சென்ற 17 பேர் பலி!

அமெரிக்காவிற்கு புலம்பெயர்வதற்காக உரிய அனுமதியின்றி மெக்சிகோ வழியாக பேருந்தில் சென்ற போது நேரிட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

வெனிசுலா, கொலம்பியா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 45 பேர் தங்களின் வாழ்வாதாரத்திற்கு அமெரிக்கா செல்வதற்காக மெக்சிகோ நாட்டின் பியூப்லா வழியாக ஆபத்தான பாதையில் பேருந்து பயணம் மேற்கொண்டனர்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பாறையில் மோதி விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. அதே இடத்தில் 15 பேர் இறந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

படுகாயத்துடன் மீட்கப்பட்ட 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.