கெஜ்ரிவால் ராஜினாமா எப்போது?.. பாஜ கேள்வி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முக்கியப் புள்ளியான கெஜ்ரிவால் எப்போது தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என பாஜ கேள்வி எழுப்பியுள்ளது.

 பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்:
“புதிய மதுபான கொள்கையை வடிவமைத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தான் ஊழலின் முக்கியப்புள்ளி. இதுகுறித்த விசாரணையில் கெஜ்ரிவாலின் தலையீடு உள்ளது. கெஜ்ரிவாலும், மதுபான கொள்கையை அங்கீகரித்த அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த அமைச்சர் கைலாஷ் கஹ்லோட்டும் எப்போது பதவியை ராஜினாமா செய்வார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.