அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள்; அவர்கள் எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள் என நிதிஷ்குமாரிடம் கூறினேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள்; அவர்கள் எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள் என நிதிஷ்குமாரிடம் கூறினேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை தமிழர்களைவிட புலம்பெயர் தொழிலாளர்கள் அழுத்தமாக சொல்வார்கள். புலம்பெயர் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் அரணாக திமுக அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.