Viduthalai: “வட சென்னை படத்தில் நடிக்காம மிஸ் பண்ணிட்டேன்… வட சென்னை 2… " – விஜய் சேதுபதி

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் பேசியுள்ள விஜய்சேதுபதி, ” “சூரி பேச்சு அருமையாக இருந்தது. வட சென்னை படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன். வட சென்னை பார்ட் 2 எழுதிகிட்டு இருக்காரு விரைவில் வரும். யாரோ யூடியூப்ல எது எதோ சொல்றாங்க. அதுனால நான் இதை சொல்லிக்கிறேன். வட சென்னை படத்தில் நடிக்க முடியாமல் போனதே என்ற வருத்தம். பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவேன், அதனால அந்தப் படத்தை நான் பார்க்கல. பாட்டு மட்டும்தான் பார்த்தேன். இதப்பத்தி வெற்றிமாறான் சார்கிட்டையும் சொன்னேன். வெற்றிமாறன் சார் விடுதலை படத்திற்காக எட்டு நாளுனு சொல்லி என்னக் கூட்டிட்டுப் போனார்.

விடுதலை படத்தில்…

எட்டு நாள் என்னை வச்சு ஆடிசன் பண்ணார். அறிவோடும், பொறுப்போடும் வேலை செய்பவர் வெற்றிமாறான். பிள்ளைகளையும் படப்பிடிப்புத் தளத்திற்குக் கூட்டிவந்து வெற்றி சார் எப்படி வேலைசெய்கிறார் என்று பார்த்துக் கற்றுக்கொள்ளச் சொன்னேன். ஆடுகளத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவின் போது ரசிகர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். இப்போ அவர் படத்தில் நடித்து இங்கு மேடையில் இருக்கிறேன். வேல்ராஜின் கேமரா வொர்க் அற்புதம்” என்று கூறினார்.

மேலும், “இளையராஜா சார் பேசினால் அமைதியாகக் கேளுங்கள். அவர் தன்னுடைய அறிவை எப்போதும் பகிர்ந்துகொண்டே இருக்கிறார். அவரின் இசை எப்படி உங்களை மயக்குதோ அப்படித்தான் அவர் பேச்சும். நிறைய அறிவும், அனுபவமும் அதில் இருக்கும். அதனால் அவர் பேசும்போது அமைதியாக, ஆழமாகக் கேளுங்கள்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.