நாகாலாந்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரிவு கூண்டோடு கலைப்பு..!

நாகாலாந்து மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரிவு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றது.

அக்கட்சிக்கு 12 உறுப்பினர்களை பாஜகவும், ஓரிடத்தில் வென்ற ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததால், மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சியின் மேலிடத்தை கலந்தாலோசிக்காமல், ஆதரவு கடிதம் அளித்ததாக கூறி, நாகாலாந்து மாநில பிரிவை கூண்டோடு ஐக்கிய ஜனதா தள மேலிடம் கலைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.