பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.

சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் தனது பிறந்தநாளை கொண்டாட, நண்பர்கள் கெளதம் மற்றும் சுந்தர் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற இவர்களின் வாகனம் முன்னாள் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரஞ்சித் குமார் உயிரிழந்த நிலையில், கெளதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுந்தருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அம்மாபேட்டை போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.