டீகோகார்சியாவில் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் விடுதலை

நாகர்கோவில்: குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்தவர்கள் உட்பட 16 மீனவர்கள் ரெஜின் என்பவரின் விசைப்படகில் கடந்த மாதம் 9ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். கடந்த 23ம் தேதி டீகோகார்சியா தீவின் அதிகாரிகள் படகையும், 16 மீனவர்களையும் சிறைபிடித்தனர். அங்குள்ள நீதிமன்றம் அவர்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம் விதித்தது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில் அபராதம் ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தியபின் படகும், 16 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் சில தினங்களில் சொந்த ஊர் வந்து சேருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.