ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 22,000 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்ட அந்நாட்டு மதத் தலைவர்

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 22 ஆயிரம் பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாஷா ஆமினி என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதனால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அந்நாட்டு நீதித்துறை தலைவர்  விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த வாரம் ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ள நிலையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈரான் மதத் தலைவர் கொமேனி உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.