டெல்லி: ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்றது தொடர்பான வழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்க 4வது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதுபோல, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது ரயில்வேயின் […]