'எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமியே அதிமுகவை விட்டு ஓடி விடு': மதுரையில் ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு போஸ்டர்..!!

மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியுள்ள நிலையில், அவரை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டும் திட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் அணி கையில் எடுத்துள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமியே அதிமுகவை விட்டு ஓடி விடு என்ற வாசகத்துடன் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். துரோகி பழனிசாமியே கழகத்தை விட்டு வெளியேறு; இல்லையெனில் தொண்டர்கள் துணையோடு வெளியேற்றுவோம் என போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெயருடன் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த போஸ்டர்களைக் கண்ட எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.